;
Athirady Tamil News

வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்- கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!

0

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் ரிசார்ட்டில் அடைத்து வைத்து இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கல்பேட்டா போலீஸ் துணை சூப்பிரண்டு ஜேக்கப் தலைமையிலான போலீசார், அங்கு அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர். அப்போது இளம்பெண் ஒருவரை 4 வாலிபர்களும், 2 பெண்களும் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இளம்பெண்ணை மீட்ட போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் பெரம்பரையைச் சேர்ந்த ரியாஸ் என்கிற முஜீப் (வயது 33), வடகரை வில்லியப்பள்ளியைச் சேர்ந்த ஷாஜகான் (42), பாறசாலையைச் சேர்ந்த மஞ்சு என்கிற பத்ரா (33) அரப்பட்டத்தைச் சேர்ந்த ஷானு என்கிற ஷானவாஸ் (28), தலைப்புழாவைச் சேர்ந்த அன்சுல், வைத்திரியைச் சேர்ந்த ஜமால்(27) மற்றும் தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த சரண்யா (33) என தெரிய வந்தது. மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் வேலை தேடி வந்தபோது, திருப்பூர் சரண்யா மற்றும் பாறசாலையை சேர்ந்த மஞ்சு என்கிற பத்ரா ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். அவர்கள் 2 பேரும் கேரளாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி, கோவை இளம்பெண்ணிடம் கூறி உள்ளனர். அதனை நம்பி கோவை பெண், கேரளா வந்துள்ளார். அதன்பிறகு அவரை ரிசார்ட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 4 இளைஞர்கள் வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.maalaimalar.com/news/national/tamil-news-bodies-of-3-women-found-floating-in-dam-in-ups-jhansi-521904?infinitescroll=

You might also like

Leave A Reply

Your email address will not be published.