;
Athirady Tamil News

கௌரி- கௌரா பூஜை: மக்களின் நலனுக்காக சவுக்கடி வாங்கிய முதலமைச்சர்..!!

0

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாட்டின்போது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார். கௌரி- கௌரா வழிபாட்டின் போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், தீமை விலகியோடும் என்றும் நம்பப்படுகிறது என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார். மாநிலம் செழிக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.