;
Athirady Tamil News

மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் மாணவர் சந்தை!!

0

மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் முன் பாடசாலையில் மாணவர் சந்தை திங்கட்கிழமை பாடசாலை முன்றலில் வெகுவிமர்சையாக நிகழ்த்தப்பட்டது. பெற்றோர்கள் சார்பாக இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான், வைத்தியர்கள் ஜே.ஹைலுல் மஸாஹித் மற்றும் எம்.ஐ.எம்.நௌஸாத், கணக்காளர் எம்.றியாஸ், தொழிலதிபர் எம்.எச்.எம்.தாஜுத்தீன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வை.கே றஹ்மான் மற்றும் CHILD FIRST தலைவர் கலாநிதி ஏ.எம்.எம். நவாஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு காலை 8 – 12 மணி வரை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன.

பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து ஏறத்தாள 40 கடைகளை நடத்தினர். நிகழ்வின் போது மாணவர்கள் சமூகத்தினருடனான தொடர்பாடல், பணப்பரிமாற்றம், புதிய பொருட்களை அடையாளம் காணல், பொருட்களை விற்றல் – வாங்கல், சந்தை பற்றிய அறிமுகம் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

மேலும் மரக்கறிகடைகள், இனிப்புப் பண்ட கடைகள், பூ மரக்கடைகள், பழக்கடைகள், சில்லறைக் கடைகள், இளநீர் கடைகள், குளிர்பானக்கடைகள், காலையுணவு சாப்பாட்டுக் கடைகள், BBQ கடைகள், தேனீர் கடை, Fancy கடைகள், துணிக்கடைகள், சிறுவர் கடை போன்ற எல்லா வகையான கடைகளும் வைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.