;
Athirady Tamil News

ராஜித இணைவார்: மஹிந்த ஆரூடம் !!

0

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித ​சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத் திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றத்தின் போது, புதிய அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்படுவார்கள், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அமைச்சர் பதவியொன்றை பொறுப்பேற்றுக்கொள்வார் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.