;
Athirady Tamil News

மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி 27-ல் கலந்துரையாடல்!!

0

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார்.

‘பரீட்சா பே சர்ச்சா’ எனப்படும் இந்த நிகழ்ச்சி 6-வது ஆண்டாக டெல்லியில் உள்ள தால்கட்டோரா உள்விளையாட்டு அரங்கில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில கல்வி வாரியம், சிபிஎஸ்சி, கேந்திர வித்யாலயா, நவோதயா மற்றும் பிற கல்வி வாரியங்களில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 2 மடங்காக அதிகரித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.