;
Athirady Tamil News

ஜாம் பஜாரில் பீடா கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகள் பறிமுதல்- ஒருவர் கைது!!

0

சென்னை ஜாம் பஜாரில் போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள பீடா கடைகளில் சோதனை செய்தனர். அங்கு போதை சாக்லேட்டுகள் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பீடா கடையில் இருந்து 7 கிலோ போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து சுரேந்தர் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், பீகாரிலிருந்து போதை சாக்லேட்டுகளை வரவழைத்து, சென்னையில் சப்ளை செய்து வந்தது அம்பலமாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.