;
Athirady Tamil News

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு – பாரத் ராஷ்ட்ர சமிதி அறிவிப்பு!!

0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார்.

அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் கே.கேசவராவ் கூறுகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.