;
Athirady Tamil News

தேசிய பரீட்சைகளின்போது மின்வெட்டை தடுக்கும் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம்!!

0

தேசிய பரீட்சைகளின்போது மின்வெட்டை தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு இன்று (பெப் 06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை ஜூலை 14ஆம் திகதி பரிசீலிக்க தீர்மானித்துள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.