;
Athirady Tamil News

கம்யூனிஸ்டு – விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!!

0

புதுவை அரசு பிரீபெய்டு மின்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. பிரீபெய்டு மின்திட்டத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு (எம்.எல்.), விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரீபெய்டு மின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதற்காக பழைய பஸ் நிலையம் அருகே ஒன்று கூடினர்.

அங்கிருந்து இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் இந்திய கம்யனிஸ்டு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், சேதுசெல்வம், அபிஷேகம், தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்டு பிரதேச செயலாளர் ராஜங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், ராமச்சந்திரன், கலியமூர்த்தி, ராமசாமி, கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், தலையாரி, அமுதவன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) சோ.பாலசுப்பிரமணியன், மோதிலால் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் சோனாம் பாளைம் வாட்டர்டேங்க் அருகே வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.