;
Athirady Tamil News

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு பொலிசார் தீவிர விசாரணை!!

0

வவுனியா குடிசைப் வீதியில் இன்று காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டு அடுத்து அங்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு படுக்கைக்குச் சென்ற நிலையில் இரு சிறுவர்கள் மனைவி ஆகியோர் படுக்கையிலும் கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. எனினும் கடன் தொல்லையால் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளாதால் பொலிசார் அவர்களை அங்கிருந்து அகற்றிவருகின்றனர். நீதவானின் வருகையின் பின்னரே உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.