;
Athirady Tamil News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேல்நிலை பள்ளி முதல்வர் கைது!!

0

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த வட்டக்கரை, மடப்பள்ளியில் தொழிற்கல்வி மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியின் முதல்வராக இருந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 53). இவர் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் வந்தது.

இதுதொடர்பாக கல்வி துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன் மீது போலீசில் புகார் அளித்தார்.

மாணவி அளித்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு மற்றும் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பள்ளி முதல்வரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.