;
Athirady Tamil News

கடனை திருப்பி செலுத்தாததால் 11 வயது சிறுமியை மணந்த வாலிபர் கைது!!

0

பீகார் மாநிலம் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர பாண்டே. 40 வயதான அவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்திருக்கிறார். இந்த கடனை அந்த பெண் நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த பெண்ணின் 11 வயது மகளை அவர் திருமணம் செய்துக் கொண்டார்.

இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருக்கிறார். தனது 11 வயது மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது தொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். மகேந்திர பாண்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.