;
Athirady Tamil News

34 நாட்களுக்கு பின்னர் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது!!

0

இந்தியாவில் கடந்த பிப்ரவரி முதல் ஏற்றம் கண்டு வந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 2,995 ஆக இருந்தது. அதன் பின்னர் 34 நாட்களுக்கு பிறகு தற்போது பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 67 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 6,135 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 5 ஆயிரத்து 550 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 30,041 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 3,191 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் 3 பேர் உள்பட நாடு முழுவதும் 14 பேர், கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் என மேலும் 17 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.