;
Athirady Tamil News

கொழும்பில் விசேட பாதுகாப்பு நீக்கம் !!

0

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு இன்று(15) முற்பகல் முதல் நீக்கப்பட்டு, வழமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாயர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவம் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்பு பிரிவினர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.