;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1705055.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்ட பெண் – வெளியான காரணம்

0

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாண்ட்விச்க்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு பதிவு செய்துள்ளார்.

பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் என்ற பகுதியில் வசிக்கும் நீராலி என்பவரே இவ்வாறு செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்காக பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை இணையவழி செயலி மூலம் வாங்கியுள்ளார்.

அதற்கு பதிலாக அவருக்கு சிக்கன் சாண்ட்விச் கிடைத்துள்ளது. இதை தெரியாமல் சாப்பிட்ட அப்பெண் அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத்துறையில் புகார் செய்துள்ளார்.

தனக்கு இழப்பீடாக அந்நிறுவனம் ரூ. 50 லட்சத்தை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து விசாரிக்கையில், RYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் இந்த தவறுக்காக நீராலிக்கு ரூ.5000 அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இதே தவறு மீண்டும் நிகழ்ந்தால் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.