;
Athirady Tamil News

பிரபல நாட்டிற்கு பறக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

0

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய விஜயம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் நளிந்த குறிப்பிட்டுள்ளார்.

இவ் விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.