2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்று ஆரம்பமாகிறது.
எவ்வாறாயினும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இன்று (18) ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.