;
Athirady Tamil News

வெசாக் தினத்தில் 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

0

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த ஜனாதிபதி பொது மன்னிப்புப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் உள்ள 61 கைதிகளுக்கு இந்த ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான 2026.05.30 அன்று சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.