ஒரு பில்லியன் டொலர் பணமோசடி ; 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்று சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், 4 தனியார் வர்த்தக வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும் இறக்குமதி செய்யாமல், குறித்த நிறுவனம் ஒன்று சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பரிமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.