;
Athirady Tamil News

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

0

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இன்று (06) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.