;
Athirady Tamil News

100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியான ஈரான் பள்ளி போர் நினைவிடமானது

0

மினாப்,

ஈரானில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 28-ந் தேதியே மினாப் ஷஜரே தாய்பெஹ் பள்ளி மீதும் தாக்குதல் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதுமுதல் அந்த பள்ளி மூடப்பட்டு கிடந்தது. தற்போது அந்த பள்ளி போர் நினைவிடமாக உருவெடுத்துள்ளது.

சேதமடைந்த பள்ளிக்குள் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 5-ந் தேதி பத்திரிகையாளர்கள் அங்கு சென்றபோது, குடும்பத்தினர் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைதியாக அஞ்சலி செலுத்தி வந்தனர். “பள்ளி இனி இயங்காது என்றும், கட்டிடம் போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்றப்படும்” என்றும் மாகாண கவர்னர் முகமது அஷூரி தாசியானி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.