;
Athirady Tamil News
Yearly Archives

2023

2048 ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதே எனது நோக்கம்!!

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில்…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.30 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

கோர்ட்டில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு- கணவர் வெறிச்செயல் !!

கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக…

18 குழந்தைகள் பலி உபி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் ரத்து!!

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலியானதையடுத்து உபி மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மரியோன் பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் பலியானதாக கடந்த டிசம்பரில்…

சகோதரியின் நகையை திருடி மோட்டார் சைக்கிள் வாங்கிய குற்றத்தில் இளைஞனொருவர் கோப்பாய்…

சகோதரியின் 05 பவுண் நகையை திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் , கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் வீட்டில் இருந்த தனது 05 பவுண் நகை களவு போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்…

யாழில். உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் – பலசரக்கு கடைக்கு 60ஆயிரம்…

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த…

தலைமை செயலகம் எதிரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சாலை மறியல்!!

ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கும்பகோணத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் எப்படி இருக்கும்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க அமெரிக்கா மாடல் ஸ்டோமி…

நான் லஞ்சம் வாங்கினேன் என நிரூபிக்க முடியுமா?- அண்ணாமலை பரபரப்பு பேட்டி!!

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறார். சில உட்கட்சி விசயங்களை பேசுவது பதவிக்கு அழகல்ல. மக்கள் பிரச்சினை குறித்து…

பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!!

உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் ரஷ்யா, சீனா…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை: வெடிமருந்து மூலப்பொருட்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது-…

காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது. இங்குள்ள குடோனில், தயாரான பட்டாசுகளை சேமித்து வைப்பது வழக்கம். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…

சிரியாவின் அலேப்போ விமான நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!!

சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று புதன்கிழமைவான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் அலேப்போ விமான நிலையத்தின் மீது இஸ்ரேலினால்…

ராமேசுவரம் கோவிலில் பழமையான ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்படுமா?: பக்தர்கள்…

அகில இந்திய புண்ணியத்தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத்தில் ஒன்றாகவும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகின்றது. அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள்…

3D அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட முதல் ரொக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது!!

முப்பரிமாண அச்சிடல் (3D printing) முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது ரொக்கெட் இன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் நகரிலிருந்து இந்த ரொக்கெட் ஏவப்பட்டது. கலிபோர்னியா…

குமரி மாவட்டத்தில் பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.…

உக்ரைன் போலந்து எல்லைக்கு இளவரசர் வில்லியம் திடீர் விஜயம் – படையினரை சந்தித்தார்!!

பிரிட்டிஸ் இளவரசர் வில்லியம் உக்ரைன் போலந்து எல்லையில் படையினரை சென்று சந்தித்துள்ளார். உக்ரைன் போலந்து எல்லையில் பிரிட்டிஸ் படையினர் உள்ள பகுதிக்கு அறிவிக்கப்படாத விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வில்லியம் உக்ரைன் மற்றும் அந்த நாட்டின் மக்களின்…

தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பங்கேற்பு!!

காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி. மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஊரப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளரும் , ஒன்றிய குழு துணை தலைவருமான…

கனேடிய சனத்தொகை ஒரு வருடத்தில் முதல் தடவையாக 10 லட்சத்தினால் அதிகரிப்பு !!

கனடாவின் சனத்தொகை ஒரு வருட காலத்தில் சுமார் 10 லட்சத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி கனடாவின் சனத்தொகை 39,566,248 ஆக இருந்தது. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் கனடாவின் சனத்தொகை 38,516,138 ஆக இருந்தது. அதாவது, 12…

அரசு ஆஸ்பத்திரிகளில் 29-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டம்- அரசு டாக்டர்கள்…

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர்கள் டாக்டர்…

தென் சீனக் கடலிலிருந்து அமெரிக்க போர்க்கப்பலை வெளியேற எச்சரித்ததாக சீனா தெரிவிப்பு!!

தென் சீனக் கடல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் ஏறத்தாழ முழுப்பகுதிக்கும் சீனா உரிமை கோருகிறது. சர்வதேச…

திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடியாக உயர்வு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200…

அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு…

அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் ஜேக் டோர்சேவின் பிளாக் நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை…

உலக பணக்காரர்களில் அம்பானிக்கு 9-வது இடம்- அதானி 23-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்!!

'ஹுருண் இந்தியா' ஆய்வு நிறுவனம், எம்3எம் மனை வணிக நிறுவனம் ஆகியவை இணைந்து உலக பணக்காரர்கள், இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் அகமதாபாத்தை சேர்ந்த 60 வயதான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு மார்ச்…

19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அசெஞ்சர்!!

பொருளாதார மந்தநிலை, வருவாய் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற காரணங்களால் பேஸ்புக், டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை குறைத்துள்ளன. அவ்வகையில், பொருளாதார சூழல் காரணமாக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அசெஞ்சர்…

அம்ரித்பால் சிங் காதல் வலையில் சிக்கிய பெண்கள்- ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி…

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவன் அம்ரித்பால் சிங் (வயது30). இவன் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறான். தன்னை ஒரு சீக்கிய மதகுரு என அறிவித்துக் கொண்ட அம்ரிபால் சிங் பஞ்சாப்பை…

புட்டின் கைது செய்யப்படும் நாட்டின் மீது ரஷ்யாவின் ஏவுகணை பாயும் – முன்னாள் அதிபர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் கைது செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் (Dmitry Medvedev) தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்…

சீனாவின் கடல்சாா் ஆதிக்கமும் கடன் பொறி இராஜதந்திரமும் !! (கட்டுரை)

இந்தியப் பெருங்கடல், உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றாகும். இது இயற்கை வளங்களின் முக்கிய ஆதாரமாக உள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைப்பதில் இந்தியப் பெருங்கடல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியப்…

காஃபி குடிப்பதால் இதயம் பாதிக்கப்படுமா? – இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு முடிவுகள்…

காஃபி குடிப்பதால் இதயம் பாதிக்கப்படுமா என இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. காஃபி குடிப்பவர்களின் இதய துடிப்பில் ஏற்படும் மாற்றம், உறக்கத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மிதமான அளவு காபி குடிப்பதால்…

ரஷ்யாவுடன் யுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல்..!

''இஸ்ரேலின் அடுத்த பாரிய யுத்தம் ரஷ்யாவுடன் தான்'' இஸ்ரேல் இராணுவத்தின் முன்னாள் தளபதியும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் மெசே தயான் ஜெருசலேமில் வைத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் கூற்று இது. இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே…

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திய 13 கிலோ தங்கம் பறிமுதல்- 4 பேர் கைது!!

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரெயில், பஸ், கார்கள் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் 30 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக பிரிந்து பல்வேறு இடங்களில்…

கேரளாவில் கிழிந்த ரூபாய் நோட்டு கொடுத்ததாக மாணவியை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட பெண்…

கேரள மாநிலம் அரசு பஸ்களில் பெண் கண்டக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அக்குளம் பகுதியில் ஒரு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் அரசு பஸ்களில் பள்ளிக்கு வந்து செல்வது…

பலத்த காற்று, வெள்ளத்தால் மிதக்கும் கலிஃபோர்னியா: சுமார் ஒரு லட்சம் வீடுகளில்…

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் நீர்நிலைகளில்…

வௌிநாட்டு தூதுவர்களுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு!!

12 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சர்வதேச தூதுக்குழுவினர் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்றிரவு சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த…

இந்திய மீனவர்கள் 12 பேருக்கு ஏப்ரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியல்!! (PHOTOS)

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளது.…