;
Athirady Tamil News

“M.F” ஊடாக, குழந்தைகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் கலைஞர் குழந்தைவேல்.. (வீடியோ, படங்கள்)

0

“M.F” ஊடாக, குழந்தைகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் கலைஞர் குழந்தைவேல்.. (வீடியோ, படங்கள்)
#################################

இலங்கை தலைநகரில் பிறந்து வளர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் கலைஞர் கனகரத்தினம் குழந்தைவேல் அவர்களின் எழுபத்திரெண்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம் வவுனியா ஆச்சிபுரத்தில் சிறுவர்களோடு கொண்டாடப்பட்டது.

தனது இளமைக் காலத்தில் இலங்கைத் தலைநகரில் தமிழ்க் கலைகளின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய கலைஞர் குழந்தைவேல் அவர்கள் பல்வேறு கலை மன்றங்களை உருவாக்கி தமிழையும் தமிழ்க் கலைகளையும் பாதுகாத்த பண்பாளராக திகழ்ந்தார்.

அவ்வாறு கலைக்காக வாழ்ந்த பெரியாரான குழந்தைவேல் ஐயாவின் பிறந்தநாளில் குழந்தைகள் ஒன்றுகூடி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகிர்ந்து கொண்டு கேக் வெட்டி தமது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

கலைஞர் குழந்தைவேல் அவர்களது பிறந்த நாளில் கலந்து கொண்ட மாணவ செல்வங்களுக்கு கற்றல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்றைய கால்லத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அனர்த்தம் பலத்த காற்றுடன் மழை மற்றும் பயணத்தடை காரணமாக தொழில் வாய்ப்பை இழந்து அன்றாட உணவுத் தேவைக்கு அல்லல்படும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டது.

குறிப்பாக வயோதிபர்களைக் கொண்ட குடும்பம் பெண் தலைத்துவக் குடும்பம் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு கலைஞர் குழந்தைவேல் ஐயா அவர்களின் பிறந்தநாள் பரிசாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் போக்குவரத்து தடைப்பட்டு பயணத்தடை அமுலில் உள்ள போதும், கலைஞர் குழந்தைவேல் ஐயாவின் பிறந்தநாள் நிகழ்வு அவரது பெறாமகன் திரு இராஜேந்திரன் தெய்வேந்திரன் குடும்பம் மற்றும் மருமகன் திரு குணராஜா சற்குணராஜா குடும்பம் மருமகன் திரு குணராஜா ஸ்ரீராஜா குடும்பம் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில்தங்கு தடையின்றி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” வெகுசிறப்பாக ஒழுங்குபடுத்தி நடாத்தப்பட்டது சிறப்பாக இங்கே குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எதிர்கால கல்வி அபிவிருத்தி யை உருவாக்கவும் முடியும் என்பதில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் அசையாத நம்பிக்கை கொள்கிறது. எனவே தாயக உறவுகளே புலம்பெயர் சொந்தங்களே தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு இணைந்திருங்கள்..

கலைஞர் குழந்தைவேல் அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது பிறந்தநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.