;
Athirady Tamil News

அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் நினைவுகூரல்.. (படங்கள் வீடியோ)

0

அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் நினைவுகூரல்.. (படங்கள் வீடியோ)

அமரர் பூமணி தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் நினைவு கூறப்பட்டது.
################################
புங்குடுதீவில் பிறந்து சுவிஸில் அமரத்துவமடைந்த பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அவர்களது முப்பத்தியோராம் நாள் தாயகத்தில் நினைவு கூறப்பட்டது.

சுவிசில் கடந்த மாதம் இறையடி சேர்ந்த பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அவர்களது முப்பத்தியோராம் நாள் அந்தியேட்டி நிகழ்வு, தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.

வவுனியா கல்நாட்டினகுளம் .மதுரா நகர் கிராமத்தில் கணவரை இழந்த குடும்பங்கள் மற்றும் வயோதிப நிலையில் நோயுற்று வாழும் குடும்பங்கள், நாளாந்த கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் என பல்வேறு தேவையுடைய குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கான உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் பூமணி அன்னையின் முப்பத்தியோராம் நாள் அந்தியேட்டி நிகழ்வு தொடர்பாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமரர் பூமணி என அழைக்கப்படும் மார்க்கண்டு புனிதவதி அவர்களது அந்தியேட்டி அன்று நலிவடைந்த மக்களுக்கான வாழ்வாதார உதவியாக அன்னாரின் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக கடந்த மாதம் திருமதி மார்க்கண்டு புனிதவதி அமரத்துவமடைந்து இறுதியாத்திரை நிகழ்விலும் அவரது குடும்ப நண்பர்களும், அயலவர்களுமான உறவுகளிலாலும் எமது தாயக உறவுகள் கொரோனா தொற்று காரணமாக அன்றாட வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டு மக்கள் உணவுக்கு சிரமப்பட்ட போது அவர்களுக்கு அன்னையின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வாறே இன்றைய முப்பத்தியோராம் நாள் நினைவு கூறல் நிகழ்விலும் தாயக உறவுகளுக்கு அன்னாரின் பிள்ளைகளான திரு.திருமதி ஏகாம்பரநாதன் திலகவதி குடும்பம், திரு.சச்சிதானந்தன் குடும்பம், திரு.சதானந்தன் குடும்பம், திரு.தயானந்தன் குடும்பம். ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இவர்களின் நிதிப் பங்களிப்பில் பெரியதோர் இரண்டு கொழிக் கூடுகளும், கோழிகளும் “உரிய பயனாளிகள்” இனங்காணப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. உரிய பயனாளிகளை முழுமையாகப் பரிசீலித்தே, உரியவர்களுக்கே வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட உள்ளது.

தங்களது தாயாரின் நினைவு கூறலில் தாயகத்தில் வாழும் வறிய நிலையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி வழங்கியமைக்கு அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை ஆகியோருக்கும், இதுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து தந்த திரு.குழந்தை அவர்களுக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அமரர் பூமணி அன்னையின் ஆத்மசாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

16.07.2021

பூமணி அம்மாவின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.