;
Athirady Tamil News

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

0

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ)

அழியா நினைவுடன் மூன்றாம் ஆண்டு விழிநீர் அஞ்சலி..
அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி

அன்புக்கும் பண்புக்கும்
இலக்கணமாய்த் திகழ்ந்தீர்!
ஆதரவு மொழி பேசி
இன்முகத்துடன் வாழ்ந்தீர்!

நாளும் பழகிய நாட்களை
கனவாய் நினைப்பதா?
எங்கள் கண்ணீரை
உங்கள் பாதங்களில்
காணிக்கையாய் அர்ப்பணித்து
அஞ்சலி செய்கின்றோம்

வரணி இயற்றாளையில் (கண்டாவளையில்) பிறந்து, வரணியில் வாழ்ந்து அமரத்துவடைந்த அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக கடந்த ஆறாம் திகதி மதியம் வன்னி எல்லைக் கிராமத்தில் உள்ள இடமொன்றில் தேவையுடையோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் உட்பட அனைவருக்கும் விசேட நினைவுச்சோறு உணவு வழங்கி நினைவு கூறப்பட்டது.

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் வாழும் தேவையுடைய சிலருக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வரணியில் பிறந்து வாழ்ந்து அமரத்துவடைந்த அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் நினைவாகவும், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதலில் அன்னாரின் திருவுருவப் படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தேவாரபாராயணம் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமரத்துவடைந்த அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் நினைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், விசேட நினைவுச்சோறு உணவு வழங்கி நினைவு கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக, இந்நிகழ்வில் கலந்து கொண்ட தேவையுடைய சிலருக்கும் இன்றைய நாட்டின் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு “பெறுமதியான உலருணவுப் பொதிகளும்” வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கழகத்தின் செயற்பாட்டாளரான திருமதி.பிரியங்கா அசோக்குமார் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆச்சிபுரம் கிராம RDS பொருளாளர் திரு *பூபாலகிருஷ்ணன் சங்கர், சமூக செயற்பாட்டாளர் *திருமதி கதிரேசன் கௌரி, எல்லப்பர்மருதங்குளம் விவசாய கிராம RDS தலைவர் திரு *கனகேஸ்வரன் ராஜகுமார், பாலர் பாடசாலை ஆசிரியர் *திருமதி கபிலன் கஜேந்தினி ஆகியோருடன் மன்றத்தின் கிராமிய ஒருங்கிணைப்பாளர்கள் விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது.

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக, நடைபெற்ற விசேட நினைவுச்சோறு உணவு வழங்கும் நிகழ்வும், வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள், வழங்கி வைக்கப்பட்டதும், அன்னாரின் உற்றார் உறவுகள் சார்பாக அன்னாரின் மகனான லண்டனில் வதியும் புளொட் தோழர்.ஸ்கந்தா அவர்களினால் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக, இரண்டாவது நிகழ்வாக அன்னாரின் அன்புமகன் லண்டனில் வதியும் புளொட் தோழர்.ஸ்கந்தா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலை மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமரத்துவமடைந்த அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு “அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” அஞ்சலி செலுத்துவதோடு

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக, அனுஸ்டிக்கப்பட்ட, நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அன்னாரின் அன்புமகன் லண்டனில் வதியும் புளொட் தோழர்.ஸ்கந்தா அவர்களுக்கு பயனாளிகள் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
06.04 2024

அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.