;
Athirady Tamil News

மராட்டியத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 28 ஆக அதிகரிப்பு: இன்று மட்டும் 8 பேருக்கு உறுதி…!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 684 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 686 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை 66,45,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,93,688 பேர் குணமடைந்துள்ளனர். 1,41,288 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 6,481 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று மேலும் 8 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஏழு பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வசை விரார் பகுதியை சேர்ந்தார். தற்போது வரைக்கும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.