;
Athirady Tamil News

யாழ். பல்கலையின் இன்று நீதி அமைச்சின் “நீதிக்கான அணுகல்” நடமாடும் சேவை!! (படங்கள்)

0

நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “நீதிக்கான அணுகல்” செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்துடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (30) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ். மாவட்ட ஒருக்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், பிரதமரின் இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செந்தில் தொண்டமான், நீதி அமைச்சின் செயலாளர் பி.கே. மாயாதுன்ன, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.துஷார, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழக சமூகத்தின் கேள்விகளுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் பி.கே. மாயாதுன்ன ஆகியோர் பதிலளித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.