;
Athirady Tamil News

அமெரிக்க தனியார் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு: மாணவர் உள்பட 3 பேர் பலி…!!

0

அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் கல்லூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். இதில் படுகாயமடைந்த கல்லூரியின் வளாக பாதுகாப்பு அதிகாரிகளான ஜான் பெயிண்டர் மற்றும் ஜே.ஜே. ஜெபர்சன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதனால், கல்லூரியில் பதற்றமான சூழல் நிலவியது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் கல்லூரியில் சோதனையிட்டனர். இதில், சந்தேகத்திற்கு இடமான நபரை போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூடுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும் எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.