;
Athirady Tamil News

இலங்கையின் 74 வது சுதந்திர தினமான இன்று சுதந்திர தின பேரணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது!! (படங்கள்)

0

இலங்கையின் 74 வது சுதந்திர தினமான இன்று சுதந்திர தின பேரணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்கள் மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இலங்கையின் தேசிய கொடியினை ஏந்தி யாழ்ப்பாண நகர வீதிகளில் வலம் வந்தனர்.

அத்தோடு பொதுமக்கள் நடைபவணியாகவும் சுதந்திர தின பேரணியினை முன்னெடுத்திருந்தனர்.

பின்னர் யாழ்ப்பாணப் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.