;
Athirady Tamil News

ஐஸ் போதைப்பொருளுடன் சகோதரர்கள் இருவர் கைது!!

0

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் 22 மற்றும் 29 வயதுடைய சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும் சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது 3 கிராம் 58 மில்லிக்கிராம் ஐஸ் போதை கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.