;
Athirady Tamil News

ஆயிரம் கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!!

0

பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 1 கிலோ 64 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் களுபோவில பிரதேசத்தில் நேற்று (07) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.

மேலும் விசாரணையில் சந்தேக நபரும் அவரது கணவரும் மற்றொரு கடத்தல்காரருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.

சந்தேக நபர் இன்று (08) கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.