;
Athirady Tamil News

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த கொடுப்பனவு வவுனியாவில் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கமைவாக குறித்த கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் இன்று (14.02) நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக வவுனியா மாவட்டத்திலும் சமுர்த்தி பயனாளிகளுக்கான அதிகரித்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கான அதிகரித்த கொடுப்பனவு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கிராம அலுவலர் எஸ்.ராகுல், சமுத்தி உத்தியோகத்தர் ம.விக்கினேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.சங்கீதன், சமுர்த்திக் குழுக்களின் தலைவர்கள், சமுர்த்திப் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.