;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது!!

0

யாழ்ப்பாணத்தில் இன்று தங்கத்தின் விலை ஆயிரத்து 500 ரூபாயினால் உயர்வடைத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கம் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை உயர்வடைந்து செல்வதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உக்ரைன் மீது ரஷ்யா இன்று போர் தொடங்கியுள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் இன்று (24) வியாழக்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 250 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை!

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று 129 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாயாகக் காணப்பட்டது
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.