;
Athirady Tamil News

வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் !!

0

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கொழும்பில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்

அவர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் சி.வி விக்னேஸ்வரனும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசனும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)

You might also like

Leave A Reply

Your email address will not be published.