;
Athirady Tamil News

வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு!!

0

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு.

கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மேலும், கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.