;
Athirady Tamil News

காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிப்பதற்கு துரித வேலைத்திட்டம்!!

0

காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகளை விரைவில் விசாரணை செய்து முடிப்பதற்கு விரைவாக வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக 25 விசாரணை சபைகள் நியமிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் 14 ஆயிரத்து 988 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பது உள்ளிட்ட பொறுப்புக்கள் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அசைச்ரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:

10. காணாமல் போன ஆட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை நடாத்துதல்

2016 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தால் மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் பிராந்திய அலுவலகள் நிறுவப்பட்டுள்ளதுடன், அப்பிராந்திய அலுவலகங்களுக்கு காணாமல் போனமை தொடர்பான 14,988 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய முறையான விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் காணாமல் போன ஆட்களின் உறவினர்களுக்கு அறிக்கைகளை வழங்கல் உள்ளிட்ட அதிக பணிகளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமையஇ குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்து முடிவுறுத்துவதற்காக 25 விசாரணைக் குழுக்களை நியமித்து துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாத்தறை, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் காணாமல் போனோர் தொடர்பான பிரதேச கிளை காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.