;
Athirady Tamil News

கொழும்பு திரும்புபவர்களுக்காக விசேட பேருந்து சேவைகள்!!

0

புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பு திரும்புபவர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

சுமார் 200 பேருந்துகள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிற்கான தனியார் துறை பேருந்துகளும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிராமப்புறங்களுக்கு பயணிக்கும் மக்களுக்காக கொழும்புக்கு வருவதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.