;
Athirady Tamil News

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

0

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்க்கொழும்பு, களனி, கல்கிஸ்ஸ, நுகேகொட, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

ஊடரங்கு உத்தரவு காலப்பகுதியில் பொது மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் குறித்த பகுதிகளினூடாக பயணிப்பதை தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.