;
Athirady Tamil News

தபால் நிலையத்திற்கு சென்ற ஊடக பிரதி அமைச்சர்

0
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கெளசல்யா ஆரியரத்ன, யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு, வட மாகாணத்தில் தபால் சேவையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தபால் திணைக்கள அதிகாரிகளுடன் விரிவான மீளாய்வுக் கலந்துரையாடலை நடத்தினார்.
இந்தச் சந்திப்பில், வட மாகாணத்தில் தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் பயனுள்ள பயன்பாடு, அவற்றுடன் தொடர்புடைய நிர்வாகச் சவால்கள், தபால் விநியோக சேவையை மேம்படுத்துவதற்குத் தேவையான வாகன மற்றும் போக்குவரத்து வசதிகள், மேலும் அரச கூரியர் சேவையை திறம்பட முன்னெடுத்துச் செல்வதில் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டு, அவற்றிற்கு விரைவான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.