;
Athirady Tamil News

வவுனியாவில் இ.போ.ச.பேரூந்து மீது கல் வீச்சு யுவதி கைது!!

0

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று(11) இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக யுவதி ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதில் குறித்த யுவதி வழிமறித்துள்ளார், அரச பேரூந்து நிறுத்தாமல் சென்றுள்ளது ஆத்திரமடைந்த குறித்த யுவதி பேரூந்து மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார். இதனால் பேருந்தின் கண்ணாடி நொருகியுள்ளது . பேரூந்தின் சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டினடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி நகரில் வசிக்கும் 28வயது பெண் ஒருவரை கைது செய்து மேலதிக விசாணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.