;
Athirady Tamil News

போராட்டக் களத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில் !!

0

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு -15ஐச் சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.