;
Athirady Tamil News

கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ.25 கோடி..!!

0

கேரள அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை உள்ளது. இங்கு வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இது தவிர பண்டிகை கால சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி குலுக்கல்கள் நடந்துள்ளன. இதில் அதிகபட்ச தொகையாக முதல் பரிசு ரூ.12 கோடி கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் பரிசு தொகையை ரூ.25 கோடியாக உயர்த்த லாட்டரி இயக்குனரகம், கேரள அரசுக்கு சிபாரிசு செய்தது. இதற்கு அரசும் அனுமதி அளித்ததை தொடர்ந்து வருகிற ஓணம் பம்பர் லாட்டரி சீட்டின் முதல் பரிசு ரூ.25 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு சீட்டு வருகிற 18-ந் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.