;
Athirady Tamil News

குப்பையில் கிடந்த தேசிய கொடி- கடலோர காவல் படை கொடிகள்: போலீசார் கைப்பற்றி விசாரணை..!!

0

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை தளம் உள்ளது. இதன் புறநகர் பகுதியில் குப்பை கொட்டப்படும் இடத்தில் நேற்று ஏராளமான தேசிய கொடிகள் கிடந்தன. அவற்றுடன் கடலோர காவல் படையின் கொடிகளும் இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இதுபற்றி கொச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று குப்பையில் கிடந்த தேசிய கொடியையும், கடலோர பாதுகாப்பு படையினரின் கொடிகளையும் கைப்பற்றினர். மேலும் அங்கு கடற்படை வீரர்கள் பயன்படுத்தும் உயிர்காக்கும் ஜாக்கெட், மழை கோட் போன்றவையும் கிடந்தன. அவற்றையும் போலீசார் கைப்பற்றியதோடு, இதனை அங்கு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக அங்கு போடப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். குப்பையில் தேசிய கொடிகள் கிடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.