;
Athirady Tamil News

சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்!! (PHOTOS)

0

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடனும், யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் Ambient Air Quality Monitoring Station நாளை 07.12.2022 காலை 9 மணிக்கு பழைய பூங்காவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ, (Dr.Ani jasinghe) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே (Mr.Supun s Pathirage), மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் பி.ஹேமந்த ஜெயசிங்கே ( Mr.P.B.Henmntha Jayasinghe), உலக சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த கலாநிதி வேர்கிங் மல்லவராச்சி (Mr.Verging Mallawarachchi), யாழ்.அரசாங்க அதிபர் மகேசன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றுமு; யாழ்.மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ் சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் யாழ்.கச்சேரிக்கு அருகில் உள்ள பழைய பூங்கா சிறுவர் மகிழ்வகத்தில் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான பணிகளினை மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.