;
Athirady Tamil News

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி !!

0

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான்.

மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடைஒன்றில் வேலைசெய்துவந்தார்.

தொழில் கருவிக்கு இன்று (14) காலை மின்இணைப்பினை இணைக்கும் முயற்சியினை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

சம்பவத்தினை தொடர்ந்து இளைஞனின் உடலம் இளைஞர்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.