;
Athirady Tamil News

ஆடு மேய்க்க சென்ற புத்தூர் இளைஞன் சடலமாக மீட்பு!!

0

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா்.

வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆடு மேய்க்க சென்று இருந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வரையில் வீடு திரும்பாத நிலையில் , இளைஞனின் தந்தை தேடி சென்ற போதே இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.
வலிப்பு காரணமாக உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது.

சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.