;
Athirady Tamil News

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!

0

கொழும்பில் இருந்து காலி வரையான தெற்கு அதிவேகப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட விபத்து காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 11 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் கனரக வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விசேட அறிவித்தல் விடுத்துள்ளனர்.

மாத்தறை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்களின் சாரதிகள் குருந்துகஹஹெதெக்ம சந்திப்பில் இருந்து வெளியேறி பத்தேகம சந்திப்பில் மீண்டும் அதிவேகப் பாதைக்குள் நுழையுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குருந்துகஹஹெதெக்ம மற்றும் பத்தேகம இடையே வாகன ஏற்பட்டுள்ள விபத்து காரணமாக ஏற்படக்கூடிய வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.