;
Athirady Tamil News

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விஷேட கலந்துரையாடல்!!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரும் திகதி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.