;
Athirady Tamil News

அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் – கையை இழந்த சிறுவன்!

0

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன் கிழமை மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 6 வயது சிறுவன் ஒருவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து, வீதியில் பந்தயத்திற்கு ஓடிய போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச ஊழியரான யாழ்.சாவகச்சோி அரசடியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி வயது 32 என்பவர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்தனர்.

அதன் போது படுகாயமடைந்த ரொட்மன் ரொணிக் ரொபின் வயது 6 என்ற சிறுவனின் இரு கைகளும் காயமடைந்த நிலையில், தற்போது ஒரு கை அகற்றப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்தனர்.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதன்போது இரு சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 11 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் 5 பேர் பளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.