;
Athirady Tamil News

எம்.ஜி.இராமசந்திரனின் 35வது ஆண்டு நினைவுதினம் கல்வியங்காட்டில் அனுஷ்டிப்பு.!! (படங்கள்)

0

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 35வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் (24) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அமரர்.யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் துணைவியார் இலட்சுமி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினருமான ராஜேந்திரம் செல்வராஜா உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கோப்பாய் சுந்தரலிங்கத்தின் துணைவியார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர். யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள், பொதுமக்கள், கல்வியங்காடு சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.